அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்!


மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான பாடுமீன்கள் சமர் நேற்று சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து வெற்றி வாகை சூடிய மெதடிஸ்த மத்திய கல்லுரி ஆதரவாளர்கள் வீதி ஊர்வலமாக கல்லடியில் இருந்து மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரிக்கு வரும் போது ஆதரவாளர்களுக்கும் மட்டக்களப்பு பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 30 நிமிடம் வரை பாதையை மறித்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

தலை கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஆதரவாளர்களின் மோட்டார் சைக்கிள்களை மட்டக்களப்பு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .

இறுதியில் வீதி போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை விடுவித்ததன் பின்னர் இந்த பாதை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்! Reviewed by Author on June 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.