அண்மைய செய்திகள்

recent
-

எழுத்தூர் பங்கில் திவ்விய நற்கருணை விழா முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையும்.....படங்கள் இணைப்பு


மன்னார் எழுத்தூர் பங்கில் நடைபெற்ற திவ்விய நற்கருணை விழா பவனி வழிபாட்டு நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஓய்வுபெற்ற ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையும் கலந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து செபித்தார்.
கத்தோலிக்க திருச்சபையானது கடந்த வாரம் முதல் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் திருவிழாவை கொண்டாடி வருவதை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்திலும் இவ் திருவிழா பல பங்குகளில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தன.
இதற்கமைய மன்னார் ஆயர் இல்லம் அமைந்திருக்கும் எழுத்தூர் பங்கிலும் கடந்த சனிக்கிழமை (04.06.2016) கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் திருவிழாவான திவ்விய நற்கருணை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எழுத்தூர் பங்கு தந்தை அருட்பணி பி.யேசுராஜா  அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவை முன்னிட்டு நற்கருணை பவனியானது சனிக்கிழமை மாலை மன்னார் ஜீவபுரத்திலிருந்து அருட்பணி நேரு அடிகளாரின் வழிபாட்டுடன் ஆரம்பமாகி அங்கிருந்து புறப்பட்டு எழுத்தூர் வீதியில் அமைக்கப்பட்ட தரிப்பிடத்தில் அருட்பணி எஸ். நெவில் பீரிஸ் அடிகளாரினால் நடாத்தப்பட்ட வழிபாட்டுடன் பின் பட்டித்தோட்டம் கீரி ஆகிய பகுதிகளுக்கு இவ் திவ்விய நற்கருணை பவனி சென்று இறுதியில் கீரி நற்கருணை ஆலயத்தில் வழிபாட்டுடன் நிறைவு பெற்றது.

இவ் வழிபாட்டு நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஓய்வுபெற்ற ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகையுடன் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணியாளர் அ.விக்ரர் சோசை அடிகளார் ஆயரின் செயலாளர் அருட்பணி முரளி அடிகளார் மற்றும் அருட்பணியாளர்களான இராஐநாயகம், சுகுணராஜா ஜெராட் (அ.ம.தி) உட்பட அருட்சகோதரிகள் அதிகமான பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.



















எழுத்தூர் பங்கில் திவ்விய நற்கருணை விழா முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையும்.....படங்கள் இணைப்பு Reviewed by Author on June 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.