மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பக்கல்லூரி பேரூந்து தரிப்பிடம் நிழற்குடை அடிக்கல் நாட்டும் நிகழ்வு....படங்கள் இணைப்பு
மன்னார் பன்னவெட்டுவான் பகுதியில் அமைந்துள்ள தொழிநுட்பக்கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் பேரூந்து தரிப்பிடம் நிழற்குடை அடிக்கல் நாட்டும் நிகழ்வு 09-06-2016 இன்று காலை 9- 30 மணியளவில் நடை பெற்றது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால்,இவ்பேரூந்து தரிப்பிடம் நிழற்குடைக்கான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இவ்பேரூந்து தரிப்பிடம் நிழற்குடை அமைப்பதற்கான 600000 ஆறு இலட்சம் ரூபய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் கட்டப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக விடப்படும்.
இவ் நிகழ்வில் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைச்சர் கலந்து சிறப்பித்தார்.

மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பக்கல்லூரி பேரூந்து தரிப்பிடம் நிழற்குடை அடிக்கல் நாட்டும் நிகழ்வு....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 09, 2016
Rating:

No comments:
Post a Comment