அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு நடை பவனி....


வன்முறையை தூண்டும் மதுவை தடுக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம மக்கள் விழிப்புணர்வு நடை பவனி ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று காலை பத்து மணியளவில் மாயவனூர் குளப்பிட்டியில் இந்த நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது.

திண்டாட கசிப்பை கனிபோல் நினைக்கிறாயா? , விதவைகள் போதும் மதுவை நிறுத்து , எமது பிள்ளைகளை தலை நிமிர்ந்து வாழ வழி விடு எனும் பல கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும் நடைபவனியாக சென்ற மக்கள், மாயவனூர் சிவன் கோவில் வரை வந்து ஆலய முன்றலில் சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பான கருத்துரையும் நடைபெற்றது.

கருத்துரைகளை கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி குனரோயன் அக்கிராம சேவையாளர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ஆகியோர் வழங்கினர்.

இவ் விழிப்புணர்வு நடை பவனியில் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி அதிகாரிகள், பொது அமைப்புக்களின் அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

கிளிநொச்சியில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு நடை பவனி.... Reviewed by Author on June 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.