அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களுக்கு.....வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!


நாட்டை சூழுவுள்ள கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக திருகோணமலை வரை மற்றும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன்பிடி நடவடிக்கைளுக்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கு.....வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! Reviewed by Author on June 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.