அண்மைய செய்திகள்

recent
-

முல்லை. அரசாங்க அதிபர் கொடுத்த உறுதிமொழி என்னவாயிற்று! - சமூக அமைப்புக்கள் கேள்வி


முல்லைத்தீவு – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத காடழிப்பு மற்றும் நிலஅபகரிப்பு முயற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் மின்கம்பங்கள் நாட்டப்பட்டு, மின் விநியோக வயர்கள் பொருத்தப்பட்டு வருகின்றமைஎதற்காக என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காடழிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அபிவிருத்திநடவடிக்கைகளும் அங்கே இடம்பெறாது. என மாவட்ட அரசாங்க அதிபர் எழுத்து மூலம் கொடுத்தஉறுதிமொழி என்னவாயிற்று என மாவட்ட சமூக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

முல்லைத்தீவு- குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றங்களுக்காக காடுகள்அழிக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு சட்டவிரோத காடழிப்பை மேற்கொண்டவர்களுக்குசட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். என ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது.காடழிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அங்கே எந்த அபிவிருத்திகளும் இடம்பெறாது. என அரசாங்கஅதிபர் உறுதியளித்துள்ளார்.

இத்தனைக்கும் பிறகு எதற்காக மின் கம்பங்கள் நடப்படுகின்றன? யாருடைய பணிப்பின்பேரில் எந்தத் தரப்பின் செல்வாக்கால் இது நடைபெறுகிறது எனவும் கேள்விஎழுப்பப்படுகிறது.

திட்டமிட்ட குடியேற்றத்திற்காக அரசியல் செல்வாக்குள்ளவர்களினால் குமாரபுரம்பகுதியில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டது.மக்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடைய கடுமையானஎதிர்ப்பினையடுத்து இந்த முயற்சி நிறுத்தப்பட்டது.

காடழிப்பை மேற்கொண்டவர்கள் மீதுவனவள பாதுகாப்பு திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கு பின்னரும் எதற்காக? யாருடைய முயற்சியில்? காடழிப்பு நடைபெற்ற இடத்திற்கு மின்விநியோகம் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியை அண்டி பல கிராமங்களின்மக்கள் மின் வசதியில்லாமல் உள்ளனர்இந்நிலையில் குடியிருப்புக்களே இல்லா குறித்த பகுதிக்கு மட்டும் மின் விநியோகம் செய்யஅதிக பிரயத்தனம் எடுக்கப்படுவது ஏன்? எனவும் முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்கள்சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுடன்தொடர்பு கொண்டு கேட்டபோது,காடழிப்பு இடம்பெற்ற பகுதியில் மின் கம்பங்கள் நடப்பட்டு அங்கே மின் விநியோகம்செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் உறுதி செய்தார்.

இதனை கடந்த 6ம் திகதி முதலமைச்சருக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியிருக்கின்றோம்.முல்லைத்தீவு மாவட்ட அரச நிர்வாகம் இந்த விடயத்தில் அக்கறையீனமாக இருப்பதையும்நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

எனவே முதலமைச்சர் இந்த விடயம் தொடர்பாகஅடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் எனவும் ரவிகரன் தெரிவித்தார்.

முல்லை. அரசாங்க அதிபர் கொடுத்த உறுதிமொழி என்னவாயிற்று! - சமூக அமைப்புக்கள் கேள்வி Reviewed by Author on June 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.