மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்ப சி.ஐ.டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரல்...( photos)
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனைகள் குறித்து அமெரிக்காவில் உள்ள புலோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்புவது சிறந்தது என்றும்,காணாமல் போனவர்கள் சார்பாக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 3 நிறுவனங்களிடம் அனுப்பாது பேரூ நிறுவனத்தினால் அமெரிக்காவில் உள்ள குறித்த நிறுவனம் சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள புலோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கு மனித எச்சங்களை அனுப்புவதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் (சி.ஐ.டி) மன்னார் நீதிமன்றத்திடம் இன்று திங்கட்கிழமை(6) கோரியுள்ளதாக காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரனை இன்று திங்கட்கிழமை(6) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
-இதன் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
குறித்த விசாரனைகள் குறித்து காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,,,
அமெரிக்காவில் உள்ள புலோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கு மனித எச்சங்களை அனுப்புவதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் (சி.ஐ.டி) மன்னார் நீதிமன்றத்திடம் இன்று திங்கட்கிழமை(6) கோரியுள்ளனர்.
எனினும் நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.
இவ்விடையம் சம்மந்தமாக அதற்கு நாங்கள் ஏற்கனவே எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.
குறித்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம் இல்லை.குறித்த நிறுவனம் எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுகின்றது என்பது குறித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
நாங்கள் நன்கு அறிந்து கொண்ட அறிவு சம்மந்தமான விடையத்தில் ஏற்கனவே மாத்தரை புதைகுழியின் போதும் இந்த அமெரிக்கா நிறுவனம் அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மிருகத்தின் எலும்புக்கூடுகள் என்ற தகவலை தந்த அடிப்படையில் காணாமல் போனவர்கள் சார்பில் இந்த அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில் இவ்வடையம் குறித்து நாம் எதிர்ப்பை தெரிவித்தோம்.
காணாமல் போனவர்கள் சார்பாகவும்,எங்களினால் முன் வைக்கப்பட்டிருந்த மூன்று நிறுவனங்களிடமும் தொடர்பை ஏற்படுத்தி அவற்றின் அறிக்கையினை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவோம் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் ஆவணி மாதம் முதலாம் திகதி(01-08-2016) மீண்டும் குறித்த வழக்கு விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அது மட்டுமல்ல மனித புதைகுழிக்கு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கிணறு தொடர்பான வழக்கும் இன்றைய தினம்(6) விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது ஏற்கனவே சட்ட வைத்திய நிபுனர் வைத்தியர் வைத்திய ரட்ன அவர்கள் மனித புதைகுழி அகழ்வது தொடர்பான ஒரு ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்படுவதாகவும்,குறித்த ஒழுங்கு விதிகள் சுகாதார அமைச்சிடம் இருந்து நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுமதி பெற்ற பின் நீதிமன்றத்தின் அனுமதியோடு கிணற்றின் அகழ்வு பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் குறித்த நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.
அதற்கமைவாக குறித்த வழக்கு விசாரனைகள் மீண்டும் எதிர்வரும் ஆவணி மாதம் முதலாம் திகதிக்கு (01-08-2016) மீண்டும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்ப சி.ஐ.டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரல்...( photos)
Reviewed by NEWMANNAR
on
June 06, 2016
Rating:
No comments:
Post a Comment