இந்திய மீனவர்களுக்கு வடக்கில் மீன்பிடிக்க அனுமதி...........!
இந்திய மீனவர்களுக்கு வட பகுதி கடற் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில்ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசு தீவிரமாக செயற்பட்டு வருவதாககுற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டினை அகில இலங்கை பொதுமீனவர் சங்கம் முன்வைத்துள்ளது.
அத்துடன் குறித்த நடவடிக்கையானது மேலாதிக்க காட்டிக்கொடுப்பு என்றும் அந்தச்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு சில தினங்கள்அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கத்தின் அமைப்பாளர் ரத்ன கமகேகுறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நடவடிக்கைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்கைச்சாத்திடுவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு வடக்கில் மீன்பிடிக்க அனுமதி...........!
Reviewed by Author
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment