இலங்கை தொடர்பான சிறப்புக் கூட்டம் நாளை ஜெனீவாவில்.....
ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் கட்டிடத்தில் சர்வதேச நிபுணர்கள் குழுவின் இலங்கை தொடர்பான சிறப்புக் கூட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.
மனித உரிமைகள் ஆணையக கட்டிடத்தின் நான்காம் அறையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனை சர்வதேச சட்டத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பொறுப்புடைமைக்கான நிபுணர்கள் குழு நடாத்துகின்றது.
எதிர்வரும் 29ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை வெளியாக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் கடந்த வருடம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் அமுலாக்கம் குறித்த முன்னேற்றம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன் பொறுப்புக்கூறலின் முக்கியத்தும், வெளிப்படையான நீதி வழங்கல் நடவடிக்கைகள் போன்றவை தொடர்பிலும், அவற்றுக்கான சர்வதேச தரம் உட்புகுத்தப்படல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான சிறப்புக் கூட்டம் நாளை ஜெனீவாவில்.....
Reviewed by Author
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment