அண்மைய செய்திகள்

recent
-

முசலிப்பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்படுமா ?

முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ 30 கிராமங்கள் உள்ளன.இங்குள்ள மக்களின் எரிபொருள்

தேவைகளைப்பூர்த்தி செய்ய எவ்வித எரிபொருள் நிரப்பு நிலையமும் இல்லை.எரிபொருள் நிரப்பு இல்லாத பிரதேச

சபைரூபவ்பிரதேசசெயலகம் என்ற சிறப்புப் பெயர் முசலியையே சாரும்.25-30 கி.மீ.பயணம் செய்து எரிபொருளை

நிரப்பவேண்டியுள்ளது.

இதற்கொரு மாற்றுத்தீர்வாக இங்குள்ள சில்லறைக்கடைகளில் பெற்றோல் விற்கப்படுவதைக் காணமுடிகிறது.இது

பலருக்குப்பெரும் உதவியாக இருக்கலாம்.ஆனால் பெற்றோல் இவ்வாறு விற்பது குற்றமாகும்.இதைப் பொலிசார் தடுப்பது

சிலருக்கு அதிக கவலையாக இருக்கலாம்.பெற்றோல் விற்பனை செய்த பல கடைகள் தீப்பற்றி முற்றாக அழி;ந்ததைப்

பார்த்திருக்கிறோம்.எமது கடைகளை காப்புறுதி செய்துள்ளோமா?அவ்வாறு செய்திருந்தாலும் சட்டவிரோத வர்த்தகத்தில்

ரூடவ்டுபட்டது ஊர்ஜிதமானால் நட்டரூடவ்டு கிடைக்காது.இவ்விடயம் சாதாரண மக்களுக்குத் தெரியாது.அனர்த்த முன்னெச்சரிக்கையாக நாம்

செயற்பட வேண்டும்.

முசலிப்பிரதேசத்தில் தனியார் ரூபவ்அரச நிறுவனம் போன்றவை எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஏன்

அமைக்கக்கூடாது ? முசலிக் கூட்டுறவுச்சங்கத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கத் தேவையான நிதியை எமது

அமைச்சர் வழங்கியுள்ளதாக அறிகிறோம் ஆனால் அதை எங்கே அமைப்பது? என்ற இழுபறி நிலைமையால் இன்னும் வேலை

ஆரம்பமாகவில்லை.

வேப்பங்குளம்ரூபவ்சிலாவத்துறை ரூபவ்மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களில் ஒவ்வொரு அரச அல்லது தனியார்

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படுவது சாலப் பொருத்தம்.

எரிபொருள் நிரப்பு நிலையமும் திறக்கமாட்டோம்.சில்லறைக் கடைகளில் எரிபொருள் விற்பதைச் சட்டம் தடுக்கிறது

என்றால் இம்மக்கள் என்ன செய்வது.இவர்களுக்கு நல்லாட்சியிலாவது விமோசனம் கிடைக்குமா? அல்லது

இராமர்ப்பிள்ளைபோல முசலி இளைஞன் மூலிகைப்பெற்றோல் கண்டுபிடிக்க வேண்டுமாரூபவ்ரூபவ்ரூபவ்?...
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப்பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்படுமா ? Reviewed by NEWMANNAR on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.