அண்மைய செய்திகள்

recent
-

மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுப்பு....


மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2ம் திகதி (2-07-2016) கொண்டாடப்படவுள்ள நிலையில் மடுத் திருத்தலத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போது திருவிழாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக குடிநீர், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, உணவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த வசதிகளை மடு திருத்தலத்தில் மேற்கொள்ளுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மடு அன்னையின் ஆடிமாத திருவிழா எதிர்வரும் 2ம் திகதி (02.07.2016) திருவிழா திருப்பலியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுப்பு.... Reviewed by Author on June 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.