அண்மைய செய்திகள்

recent
-

ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 8 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா?


இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால், 40 சிகெரட் புகைப்பது குறித்து வெளியான போட்டோ உலகம் முழுவதும் வைரலானது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசு , குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கத் துவங்கியது. தலைநகர் ஜகார்தாவுக்கு அனுப்பப்பட்ட சிறுவனுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனிடையே புகைப்படிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலையான ஆர்டி, பின்னர் உணவுக்கு அடிமையானார். அதிகப்படியான உணவை சாப்பிட்டதால். அதீதமாக அவர் உடல் எடை அதிகரித்தது. இதனிடையே அதிலிருந்தும் தற்போது மீண்டுள்ள ஆர்டி, உடல் எடை குறைந்து அழகாக காணப்படுகிறார்.​




ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 8 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? Reviewed by Author on July 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.