மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வலய செயலணியில் பலர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி வைப்பு.-Photos
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணி இன்று (30) சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு போர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
குறிப்பாக காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம் பெற்று வரும் விசாரனைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்,காணாமல் போனவர்கள் தொடர்பில் 6 மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வோண்டும்.
காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு,இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பலருக்கு பல வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.ஆனால் எங்களைப்போல் பலருக்கு ஒரு உதவித்திட்டங்கள் கூட வழங்கப்படவில்லை எனவும் குறித்த பிரச்சினைகள் குறித்து உரிய விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மக்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ள போதும் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம்,இழப்பீட்டுக்கான அலுவலகம், விசேட சட்டவாளர்களையும், நீதிபதிகளையும், உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை,மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான அலுவலகம் போன்ற அலுவலகங்களை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதோடு மக்களின் கருத்துக்களும் பல்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வலய செயலணியில் பலர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 30, 2016
Rating:
No comments:
Post a Comment