அண்மைய செய்திகள்

recent
-

"ஜனாதிபதி மைத்திரிபாலவும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார்"-சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சார்ள்ஸ் நிர்மலநாதன் சுமத்தியுள்ளார்.

டெய்லி சிலோனின் “கேள்விக்கு மட்டும் பதில்” நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் இராணுவத்தினரால் தமிழர்களின் கலாச்சாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே இந்நாள் ஜனாதிபதியை தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கட்சிக்குள் யார் வந்து போனாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியத்தலைவர் பிரபாகரன் மட்டுமே எனவும், தமது போராட்டம் ஒரு நாள் மௌனிக்கும் என்று பிரபாகரனுக்கு முன்னரே தெரிந்ததன் காரணமாகவே அவர் சிறிய சிறிய தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஜனாதிபதி மைத்திரிபாலவும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார்"-சார்ள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on July 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.