உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியாகிய மன்னாரின் சமர் இறுதிப்போட்டி- 03.07.2016
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகமும் இணைந்து மன்னாரில் நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியாகிய மன்னாரின் சமர் இறுதிப்போட்டியானது 03.07.2016 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு ஜோசவ்வாஸ் நகர் ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கடந்த 4 மாதங்களாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 26 கழகங்கள் முதல் சுற்றில் விலகல் முறையில் மோதி சிறந்த 8 கழகங்கள் சுப்பர் 8 க்கு தெரிவுசெய்யப்பட்டு அவை லீக் முறையில் ஆடி தற்போது Pடயல ழுகக முறையில் இறுதிப்போட்டிக்கு மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க வும் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் வி கவும் தெரிவாகியுள்ளன.
இவ்விரு கழகங்களும் பல போட்டிகளில் சந்தித்திருந்தாலும் மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளனர். சம அளவில் பலம் வாய்ந்த அணிகளாக காணப்படுகின்றது.
இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சரும் உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான கௌரவ அர்ஜீண ரணதுங்க அவர்களும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக குழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அவர்களும் நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாசன் அவர்களும் பேசாலை பற்றிமா மமவி அதிபர் அருட்சகோ ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளரும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன கவுண்சில் உறுப்பினருமாகிய திரு ஞானராஜ் அவர்களும் தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி யுட் குருஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ள இரு அணிகளும் இங்கே காணப்படுகின்றனர். சிவப்பு நிற சீருடையில் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க வும் நீல நிற சீருடையில் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் வி கவும் காணப்படுகின்றனர்.
லீக் செயலாளர்
கடந்த 4 மாதங்களாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 26 கழகங்கள் முதல் சுற்றில் விலகல் முறையில் மோதி சிறந்த 8 கழகங்கள் சுப்பர் 8 க்கு தெரிவுசெய்யப்பட்டு அவை லீக் முறையில் ஆடி தற்போது Pடயல ழுகக முறையில் இறுதிப்போட்டிக்கு மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க வும் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் வி கவும் தெரிவாகியுள்ளன.
இவ்விரு கழகங்களும் பல போட்டிகளில் சந்தித்திருந்தாலும் மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளனர். சம அளவில் பலம் வாய்ந்த அணிகளாக காணப்படுகின்றது.
இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சரும் உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான கௌரவ அர்ஜீண ரணதுங்க அவர்களும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக குழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அவர்களும் நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாசன் அவர்களும் பேசாலை பற்றிமா மமவி அதிபர் அருட்சகோ ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளரும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன கவுண்சில் உறுப்பினருமாகிய திரு ஞானராஜ் அவர்களும் தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி யுட் குருஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ள இரு அணிகளும் இங்கே காணப்படுகின்றனர். சிவப்பு நிற சீருடையில் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க வும் நீல நிற சீருடையில் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் வி கவும் காணப்படுகின்றனர்.
லீக் செயலாளர்
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியாகிய மன்னாரின் சமர் இறுதிப்போட்டி- 03.07.2016
Reviewed by NEWMANNAR
on
July 01, 2016
Rating:
No comments:
Post a Comment