அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச விசாரணை ஊடாகவே தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்!


வெற்றுக் கோஷங்கள் மற்றும் ராஜபக்ச போன்ற மனிதர்களைக் காட்டி மக்களை ஏமாற்றும் நாடகத்தினையும் தவிர்த்து, ஒரு பொறிமுறைத் தன்மையினைச் செயற்படுத்த முன்வரவேண்டும்.

சர்வதேச விசாரணை மூலம் மாத்திரமே தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.*

யாழ். கந்தர்மடத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறல்கள் தொடர்பாகத் தற்போது அரசாங்கம் தெளிவான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள அரசாங்கத்தினைப் பொறுப்புக் கூற வைக்கவேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை, ஒரு பக்கச் சார்பான வகையில் முற்று முழுவதாகப் பொறிமுறைத் தன்மையினை இழந்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை ஊடாகவே தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்! Reviewed by Author on August 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.