அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையின் கீழ் வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை-பிரதேச சபையின் செயலாளர் இ.தயாபரன்.

பிரதேச சபைகளை வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 320 வீதி விளக்குகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் செயலாளர் இராசையா தயாபரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

320 வீதி விளக்குகளுக்கு கேள்வி கோரப்பட்டு, அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வழங்குனருக்கு கொள்வனவு கட்டளை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி விளக்குகள் கிடைக்கப்பெற்றதும்பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குறித்த வீதி விளக்குகளை பொருத்துவதற்கான இடங்கள் பிரதேச ரீதியாக குறித்த பிரதேசங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் ஆலோசனை குழுக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள இருப்பதுடன், ஏற்கனவே பொது அமைப்புக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளும் கருத்தில் எடுக்கப்பட்டு, பொருத்தும் இடங்கள் தெரிவு செய்யப்படும் என இராசையா தயாபரன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபையின் கீழ் வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை-பிரதேச சபையின் செயலாளர் இ.தயாபரன். Reviewed by NEWMANNAR on August 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.