அண்மைய செய்திகள்

recent
-

உங்கள் பிள்ளைகளுக்கு இணையாக யாரும் இல்லை இந்த உலகில்.....


பரிட்சை பரிட்சை படி படியென பிள்ளைகளை கட்டாயப்படுத்தும் துன்பப்படுத்தும் வற்புறுத்தும் பெற்றோர்கள் கவனத்திற்கு .........
  • தவனைப்பரிட்சையாகட்டும்
  • புலமைப்பரிட்சையாகட்டும்
  • சாதாரண தரம்பரிட்சையாகட்டும்
  • உயர் தரம்பரிட்சையாகட்டும்
  • பல்கலைகழகபரிட்சையாகட்டும்
  • வேலைக்கானபரிட்சையாகட்டும்
  • மேற்படிப்பு பரிட்சையாகட்டும்
  • வேறு எந்தப்பரிட்சையாகட்டும் 
  •  குழந்தைகளை பிள்ளைகளை மாணவர்களை சித்தியடைய வில்லை என்றால் திட்டி வசைபாடி மற்றவரோடு ஒப்பிட்டு குறை காணமுயலவேண்டாம் வாழ்க்கை என்பதோ பரீட்சை தான் ஒன்றில் தோற்றால் இன்னொன்று தட்டிக்கொடுங்கள் வாழ்வின் வளைவுகளை நெழிவு சுழிவுகளை சுட்டிக்காட்டுங்கள் உங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள் அவ்ர்களின் ஆசைகளுக்கு செவிமடுங்கள் வழிகாட்டுங்கள்,,,,,,
சூரியனைப்போல ஒளி தரும் ஆற்றல்கள் அவர்களிடம் உண்டு  அதை நீங்கள் முதலில் கண்டு கொள்ளுங்கள் அந்த நதிக்கு வழி விடுங்கள்  ஒவ்வொரு நதியும் இந்தக்கால நதியில் கலாநிதிகளாக நீதிபதிகளாக  காலத்தை வெல்லும் அதிதிகளாக நாளைய தலைமுறையினரை வளர்த்தெடுப்பது  இன்று பாரிய பொறுப்பாகும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய முக்கியமானதும் முதன்மையன விடையமாகும்.

உறுதுணையாக இருங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு இணையாக யாரும் இல்லை
இந்த உலகில்.....


படித்ததில் பிடித்தது பகிர்ந்து கொள்கிறேன்  

கொல்கத்தா பாடசாலை ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று....

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விடயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுல்..
ஒரு கலைஞன் இருப்பான்
அவனுக்கு கணிதம் தேவைப்படாது.

அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்
அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.
ஒரு இசைஞானி இருப்பான்
அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

ஒரு விளையாட்டு வீரனிருப்பான்
அவனது உடல் நலனே முக்கியமன்றி
பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் சிறந்த பிள்ளை.. எடுக்காவிட்டால்..

தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையைப் பறித்து விடாதீர்கள்.

சொல்லுங்கள் அவர்களுக்கு இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.

நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக்கூடிய இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் புள்ளியை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி செய்து பாருங்கள்ப ரீட்சையை வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் புள்ளி உங்கள் பிள்ளையின் கணவை, திறமகளை அழித்து விடக்கூடாது.

வைத்தியர்களும் பொருயியலாலர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.
உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
-அதிபர்-

நானும் மாணவனாக
-வை கஜேந்திரன்-

உங்கள் பிள்ளைகளுக்கு இணையாக யாரும் இல்லை இந்த உலகில்..... Reviewed by Author on August 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.