கூட்டமைப்பை இன்று சந்திப்பதற்காக அமெரிக்க தூதுவர் யாழ்.விஜயம்...
யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முக்கியத்துவமிக்க சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் ஒபரேஷன் பசுபிக் ஏஞ்சல் உதவி வேலைத்திட்டத்தையும் அமெரிக்க தூதுவர் ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் மற்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேவையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அமெரிக்க தூதுவரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துமிக்கதாக அவதானிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின்போது விசேடமாக பொறுப்புக்கூறல் செயற்பாடு நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆழமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கையானது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச பங்களிப்புடன் நம்பகரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
கூட்டமைப்பை இன்று சந்திப்பதற்காக அமெரிக்க தூதுவர் யாழ்.விஜயம்...
Reviewed by Author
on
August 15, 2016
Rating:

No comments:
Post a Comment