மன்னார் மாவட்ட மடு வலையக் கல்வி திணைக்கள களஞ்சிய அறை திறப்புவிழா - படங்கள் இணைப்பு...
மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்தின் கல்விப் பணிமனைக்கு உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் TSEP திட்டத்தின்கீழ் சுமார் 04 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட களஞ்சிய கட்டிடத்தை 11-08-2016 வியாழன் காலை 11 மணியளவில், மடு வலய கல்வி பணிப்பாளர் டி.ஜோன் குயின்ரஸ் அவர்களின் அழைப்பிலே பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.
மடுவலையத்தில் களஞ்சிய அறை இல்லாதா குறையானது இதன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வின் மடு அலுவலகத்தின் சகல அலுவலர்கலும் பாடசாலை அதிபர்களும் பாடசாலை மாணவ மாணவிகளும் முன்னாள் மடு வலய கல்விப்பணிப்பாளர் திரு.G.ஜேக்கப் அவர்களுடன்
நிகழ்விற்கு மடு கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் நிர்வாகம் டி.பால்ராஜ் அவர்களை தலைமை தாங்கினார், அத்தோடு கல்வி வலயத்தின் அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் தலைவர்கள், மதப்பெரியார்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்த்னர்.
மன்னார் மாவட்ட மடு வலையக் கல்வி திணைக்கள களஞ்சிய அறை திறப்புவிழா - படங்கள் இணைப்பு...
Reviewed by Author
on
August 12, 2016
Rating:

No comments:
Post a Comment