அண்மைய செய்திகள்

recent
-

மடு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி- மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மருதமடு திருத்தளத்தின் வருடாந்த ஆவனி மாத உற்சவம் நாவ நாள் திருப்பலிகளுடன் இடம் பெற்று வரும் நிலையில் நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாட்கள் திருவிழா திருப்பலிகள் தமிழ்,சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.


இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனைகள் இடம் பெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு திருப்பலியும்,அதனைத்தொடர்ந்து வேஸ்பர் ஆராதனைகளும் இடம் பெறவுள்ளது.

நாளை திங்கட்கிழமை(15) காலை 6.15 மணிக்கு திருநாள் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுக்கப்படவுள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை,கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திரு நாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பார்கள்.

நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஆரம்பமாகி திருச்சொரூப பவனி இடம் பெற்று திருச்சொரூப ஆசிர் வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தளத்திற்கு வருகை தந்துள்ளதாக மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்தார்.

மடு திருவிழாவிற்கான ஆயத்தங்கள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது.குறிப்பாக குடி நீர்,சுகாதாரம்,போக்குவரத்து, உணவு,பாதுகாப்பு,உற்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை மேலும் தெரிவித்தார்.
மடு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி- மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை Reviewed by NEWMANNAR on August 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.