கிளிநொச்சி ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாட்டாளருக்கு மரண அச்சுறுத்தல்
கிளிநொச்சியில் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட பேரணியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ஒருவர், குறித்த ஏற்பாட்டாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் சீஐடி என்று அறிமுகப்படுத்தியதுடன், அவரை அச்சுறுத்தியுள்ளார்.
தாம், அச்சுறுத்திய இந்த விடயத்தை வெளியில் கூறினாலும் கொல்லப்படுவாய் என்றும் குறித்த தொலைபேசியில் பேசியவர் அச்சுறுத்தியதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாட்டாளருக்கு மரண அச்சுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
August 14, 2016
Rating:

No comments:
Post a Comment