அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் போதையை ஏற்படுத்தும் 'மாவா'என அழைக்கப்படும் பாக்கு இளைஞர்கள் மத்தியில் விற்பனை.(படங்கள் )

போதையை ஏற்படுத்தும் 'மாவா' என அழைக்கப்படுகின்ற ஒரு வகை பாக்கு மன்னாரில் இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பஸார் பகுதியில் குறித்த 'மாவா' என அழைக்கப்படுகின்ற போதைப்பாக்கு மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

குறித்த போதை பாக்கினை இளைஞர்கலே அதிகம் பயண்படுத்துவதாகவும்,தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் குறித்த போதைப்பாக்கின் பயண்பாடு அதிகரித்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த போதையை ஏற்படுத்துகின்ற பாக்கு ஒரு சரை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகின்றது.

-எனவே மன்னார் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் குறித்த போதையை ஏற்படுத்துகின்ற 'மாவா' பாக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மன்னாரில் போதையை ஏற்படுத்தும் 'மாவா'என அழைக்கப்படும் பாக்கு இளைஞர்கள் மத்தியில் விற்பனை.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.