அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் மாணவர்கள், அரசியல்வாதிகள் பெருமளவில் மனஅழுத்தங்களால் பாதிப்பு....


இலங்கையில் இளம்பராய மாணவர்கள் மட்டுமன்றி அரசியல்வாதிகளும் பெருமளவிலான மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

மனஅழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு உதவும் வகையில் யோகா நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை கண்டியில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மண் பியதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதற்கு மனஅழுத்தங்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே அதிகளவில் தற்கொலை நடைபெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இவ்வாறான மனஅழுத்தங்களால் பீடிக்கப்படுவதற்கு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காரணமாக அமைவதில்லை. வயது வித்தியாசமும் இதற்கில்லை.

இளம் பராயத்து மாணவர்கள் தொடக்கம் நாடாளுமன்றத்தின் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கூட மன அழுத்தங்களால் பீடிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் பேராசிரியர் லக்ஷ்மண் பியதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாணவர்கள், அரசியல்வாதிகள் பெருமளவில் மனஅழுத்தங்களால் பாதிப்பு.... Reviewed by Author on August 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.