வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்...
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
எதிர்வரும் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்.
இதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து ஆண்டு திட்டமொன்று இதற்காக அமுல்படுத்தப்பட உள்ளது.
மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்...
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment