வடமாகாணத்தின் வல்லவனாய் வெற்றி வாகை சூடிய மன்னார் கிறிக்கெட் அணி…படங்கள் இணைப்புடிய மன்னார் கிறிக்கெட் அணி…படங்கள் இணைப்பு
வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் வடமாகாணத்தில் உள்ள 05 மாவட்டங்களையும் அதாவது யாழ்ப்பாணம்-கிளிநொச்சி-முல்லைத்தீவு-வவுனியா-மன்னார் மாவட்டங்களுக்கு இடையிலான கிறிக்கெட்;போட்டியில் மீண்டும் ஒருமுறை தனது திறமையினை பறைசாற்றி வடமாகாணத்தின் தனியொருவனாக வடக்கின் வல்லவனாக வெற்றி வாகை சு10டியுள்ளது எமது மன்னார் மாவட்டம்….
மன்னார் மாவட்டத்தில் உள்ள கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களை உள்ளடக்கி அணியினரே கடந்த 3 நாட்களாக தமது பலத்தினை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தினை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டனர்
தாழ்வுபாடு கழகத்தின் வீரர் சாந்தன் அவர்களின் தலைமையில் சென்ற அணியில் மன்னார் மாவட்டத்தின் தாழ்வுபாடு கழகத்தின் வீரர் ரோய் சித்திவினாயகர் கழகத்தின் வீரர் பவன் அவர்களுடன் ஏனைய வீரத்களும் தமது திறமையினை வெளிப்படுத்தினார்.
வட மாகாண பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் மன்னார மாவட்டம் இரண்டாம் இடத்தை பெற்று மன்னாருக்கு பெருமை சேர்த்தனர்
சிறப்பம்சமாக மாகாணங்களுக்கிடையிலான தேசிய கிறிக்கெற்போட்டியில் விளையாடுவதற்கு வடமாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளது பெருமையும் மகிழ்ச்சியுமாகும் தேசியப்போட்டியிலும் எமது மன்னார் மாவட்ட அணியே வெற்றி பெற வீரர்களை வாழ்த்துவதோடு பாராட்டி மகிழ்கிறது மன்னார் வாழ் மக்களுடன் நியூ மன்னார் இணையக்குழுமத்தினரும்.
வெற்றி பெற வாழ்த்தி நிற்கின்றோம்….
தகவல்-மன்னார் பிரதேச விளையாட்டு அலுவலர்-J-JEROM
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
வடமாகாணத்தின் வல்லவனாய் வெற்றி வாகை சூடிய மன்னார் கிறிக்கெட் அணி…படங்கள் இணைப்புடிய மன்னார் கிறிக்கெட் அணி…படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
August 01, 2016
Rating:

No comments:
Post a Comment