தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை.....
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்புநேற்று திங்கட்கிழமை (05) இடம் பெற்றுள்ளது.
சந்திப்பின் போது திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, குரங்கு பாஞ்சான் இராணு முகாம், சூரங்கள் இராணுவ முகாம், தோப்பூர் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாம் மற்றும் மூதூர் தக்வா நகர் கடற்படை முகாம், கெல்கேயார் சென்டர் அமைந்திருக்கும் தனியார் காணியும் சேர்ந்து இருக்கும் கடற்படைமுகாம், புல்மோட்டையில் அமைந்திருக்கும் இராணுவ முகாம் ஆகிய முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை.....
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment