அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் மற்றுமொரு வெளியீடாக வெளிவருகிறது பார்கவியின் “அது ஒரு கனாக்காலம்” - கவிதை நூல்

மன்னார் மாவட்ட பெண் எழுத்தாளார்கள் வரிசையில் கரம் கோர்த்திருக்கும் பார்கவியின் கவிதை நூல் வெளியீட்டு விழா 16.10.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மன்னார் நகரமண்டபத்தில் 2.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காளார் செல்வி.முருகேசு சிவகுமாரி கலந்து சிறப்பிக்கிறார்.

நூல் நயவுரையை மன்/புனித வளனார் றோ.க.த.பாடசாலை ஆசிரியை செல்வி.ஜெ.டிலானி ஆற்றவுள்ளார். செல்வன். சுலக்‌ஷனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நூல்வெளியீட்டு விழா நிகழ்விற்கான கலைநிகழ்வுகளை மன்னார் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகிர்தா எடின்பரோவின் கவிதாலயா நாட்டியப்பள்ளி மாணவிகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளனர்.


மன்னார் தமிழ்ச்சங்கத்தின் மற்றுமொரு வெளியீடாக வெளிவருகிறது பார்கவியின் “அது ஒரு கனாக்காலம்” - கவிதை நூல் Reviewed by NEWMANNAR on October 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.