அண்மைய செய்திகள்

recent
-

அதிசயம்! ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்தது: எப்படி தெரியுமா?


அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் மார்கரேட் ஹகின்ஸ்.

இளம் பெண்ணான இவர் கருவுற்றிருந்தார். இந்த நிலையில் கருவுற்று 16 வாரங்கள் ஆன நிலையில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் அவரை சோதித்த போது மார்கரேட் வயிற்றில் இருந்த குழந்தைக்கு sacrococcygeal teratom என்னும் விசித்திர கட்டி குழந்தையின் ரத்த ஓட்டத்தை தடுத்து அதனால் குழந்தையின் இதயம் செயலிழக்கும் அபாயத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் 23வது வாரம் ஆகும் போது அந்த இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறிந்தனர்.

இதனால் குழந்தையை காப்பாற்ற ஒரு விசித்திர முடிவை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.

பின்னர் அந்த பெண் குழந்தையின் முதுகில் இருந்த அந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்துவர்கள் மூடினார்கள்.

பிறகு 12 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவமானது மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது.



அதிசயம்! ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்தது: எப்படி தெரியுமா? Reviewed by Author on October 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.