அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் கெடுபிடிகள் அதிகரிப்பு-71 மீனவர்கள் கைது.



முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த 71 மீனவர்களை சிலாவத்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் மீன் பிடிக்கு பயண்படுத்திய 13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காலை 7 மணியளவில் குறித்த மீனவர்களின் படகுகளை கடற்படையினர் கடலில் வைத்து சோதனையிட்டுள்ளனர்.


இதன் போது படகுக்கான காப்புறுதி மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை பரிசீலித்த கடற்படையினர் குறித்த ஆவணங்கள் இல்லாத மீனவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறையைச் சேர்ந்த 7 மீனவர்களும், வங்காலையைச் சேர்ந்த 4 மீனவர்களும், நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த 60 மீனவர்களும் என தெரிய வந்துள்ளது.

-மேலும் சிலாபத்துறை மீனவர்களின் 3 படகுகளும்,வங்காலை மீனவரின் 1 படகும்,நறுவிலிக்குளம் மீனவர்களின் 9 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்களின் கைது தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என் மெராண்டா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

கடற்படையினர் தன்னிச்சையாக செயற்பட்டு மீனவர்களை கைது செய்கின்றனர்.மீனவர்கள் கடற்தொழில் திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின் காப்புறுதி ஆவணங்களை பரிசோதனை செய்வது கடற்படையினரின் வேளை இல்லை.தொடர்ந்தும் கடற்படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக மீனவர்கள் எங்களிடம் முறையிட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் எவறும் எங்களிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
முத்தரிப்புத்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் கெடுபிடிகள் அதிகரிப்பு-71 மீனவர்கள் கைது. Reviewed by NEWMANNAR on October 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.