சிங்கள மொழிக் கடிதத்தை தமிழில் அனுப்பினார் ஆளுநர் - மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி
வடமாகாண ஆளுநர் சிங்கள மொழியில் அனுப்பிய கடிதத்தை மாணவர்கள் திருப்பி அனுப்பிய நிலையில், குறித்த கடிதத்தை ஆளுநர் இன்று தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம்-குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு இளைஞர்களினதும் மரணத்திற்கு உரிய தீர்வை முன்னெடுக்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை யாழ் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.
இதில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் செயலாளரிடமும் மாணவர்கள் கையளித்தார்கள்.
சிங்கள மொழிக் கடிதத்தை தமிழில் அனுப்பினார் ஆளுநர் - மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி
Reviewed by NEWMANNAR
on
October 27, 2016
Rating:

No comments:
Post a Comment