வடக்கு ஆளுநர் அலுவலகம் சிங்கள மாணவர்களால் சுற்றிவளைப்பு
கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையினை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களின் படுகொலையினை கண்டித்து யாழ் நகரப்பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாண கச்சேரியின் வாயிலை மறித்து தற்போது போராட்டத்தில் ஒரு பகுதி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த படுகொலை தொடர்பில் வடக்குமாகாண ஆளுநர் எந்தவித கருத்துக்களையும் கூறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இருப்பினும் குறித்த படுகொலை சம்பவத்தினை கண்டித்து இன்று கிளிநொச்சி மற்றும் நாளை யாழ்ப்பாணம் பகுதிகளில் பேரணிகளை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஆளுநர் அலுவலகம் சிங்கள மாணவர்களால் சுற்றிவளைப்பு
Reviewed by Author
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment