அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை கடைத்தொகுதி பிரச்சினை முடிவுக்கு வந்தது-Photos


மன்னார் நகர சபை கடைத்தொகுதி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பிரதம எதிர்க்கட்சி கொறடா ரிப்கான் பதியுதீனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடமாகாண சபை 64 வது கூட்டத்தொடர் இன்று யாழ் கைதடியில் உள்ள வடமாகாண சபையில் இடம் பெற்றது.

இதன் போது வடமாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் நகரசபை கடைத்தொகுதிக்கான பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இக்கடைக்கான நகரசபை நிர்ணயித்திருந்த 5 இலட்சம் ரூபா கடைக்கான குத்தகைப்பணத்தினை உடனடியாக செலுத்த வேண்டும் என கடந்த மாதம் கடை உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் மன்னார் நகர சபை கோரிக்கை விடுத்திருந்தது.

இச்சம்பவத்தை உடனடியாக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனின் கவனத்திற்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உரிய தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்,

இதனடிப்படையில் 64 வது கூட்டத்தொடரில் இன்று வடமாகாண சபை செயலாளர் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று இப்பிரச்சினைக்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் போது வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனும் இத்தீர்வை பெற்றுக்கொடுப்பதில் துணை நின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





மன்னார் நகர சபை கடைத்தொகுதி பிரச்சினை முடிவுக்கு வந்தது-Photos Reviewed by NEWMANNAR on October 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.