அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை கடற்படை மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி-Photos

 பகுதியில் கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்கள்; உற்பட 9 பேரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று வியாழக்கிழமை (27) பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக சட்டத்தரணி எஸ்.ஜெபநேசன் லோகு தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.ஜெபநேசன் லோகு மேலும் தெரிவிக்கையில்,,,

முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த 18 ஆம் திகதி இரவு கடற்படையினருக்கு தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் மூன்றாவது தடவையாக இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

குறித்த 6 சந்தேக நபர்களும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸராஜா அவர்களின் உத்தரவிற்கு அமைவாக அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்தப்பட்டனர்.

5 சாட்சிகள் அடையாள அணிவகுப்பிற்கு அடையாளம் காண வருகை தந்திருந்தனர்.

குறித்த 5 சாட்சிகளில் 4 சந்தேக நபர்கள் மட்டும் வௌ;வேறு சாட்சியங்களாக அடையாளம் காணப்பட்டனர். 2 சந்தேக நபர்கள் 5 சாட்சிகளாகவும் அடையாளம் காணப்பட்டனர்.

அடையாள அணிவகுப்பு நடைபெறும் முன்னரே அடையாள அணிவகுப்பிற்கு கலந்து கொள்ள இருந்த சாட்சி ஒருவர் வைத்தியசாலையில் உள்ளதாகவும்,அவர் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டும் வெளியில் வந்த பின்னரே இந்த அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிலாபத்துறை பொலிஸாரினாலும்,பாதிக்கப்பட்ட கடற்படை சார்பாக ஆஜரான சட்டத்தரணியாலும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த ஆட்சேபனைக்கு சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எதிர்ப்புத்தெரிவித்ததோடு,இரண் டாவது தடவையாக அடையாள அணிவகுப்பான இன்று வியாழக்கிழமை இடம் பெற உள்ளது.

எனவே மன்றில் ஆஜரான 5 சாட்சியங்களை வைத்து குறித்த அடையாள அணிவகுப்பு இன்று வியாழக்கிழமை நடத்தப்பட வேண்டும் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமைக்கு அமைவாக அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட்டது.

மீண்டும் ஒரு சாட்சிக்காக அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று மன்றில் தெரிவித்த ஆட்சேபனையை நாங்கள் எதிர்த்தோம்.

அதன் பின்னராக அடையாள அணிவகுப்பு மீண்டும் நடத்த முடியாது என்று நீதவான் உத்தரவிட்டார்.


கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களுடன் மேலும் 3 சந்தேக நபர்கள் திறந்த நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு மொத்தம் 9 சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை விண்ணப்பம் செய்து அதன் அடிப்படையில் ஒவ்வெறு சந்தேக நபர்களும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டு ஒவ்வெறு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குறித்த 9 சந்தேக நபர்களும் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 6 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் இருந்த போது சிறைச்சாலையினுள் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டமை மற்றும் அவர்களுக்கு உரிய முறையில் உணவுகள் வழங்கப்படாமை தொடர்பில் நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று நீதவான் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் இயல்பு நிலை வழமைக்கு வர வேண்டும் என்று நீதவான் கடற்படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்றன் புனித நாயகம்,சட்டத்தரணி அர்யுன் ஆகியோர் ஆஜராகினர்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என சட்டத்தரணி எஸ்.ஜெபநேசன் லோகு மேலும் தெரிவித்தார்.




முத்தரிப்புத்துறை கடற்படை மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி-Photos Reviewed by NEWMANNAR on October 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.