அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கத்தின் சகல எம்.பிக்களுக்கும் மாதம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவு


அமைச்சுக்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ள 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கான வாடகையாக தற்போது மாதாந்தம் இரண்டு லட்சம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளதுடன் மேலும் சிலர் தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானது எனவும் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில், சகல கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அவர்களின் கருத்தை அறிந்து இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்காத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் சகல எம்.பிக்களுக்கும் மாதம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவு Reviewed by NEWMANNAR on October 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.