கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் யாழ் பல்கலை கழக மாணவர்களின் படு கொலையை கண்டித்து, நேற்று(25) திருகோணமலை வளாகத்திலிருந்து பேரணியாக வருகை தந்து பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பேரணியினர் திருகோணமலை நகர வீதியினூடாக சென்று வாகனங்களுக்கு செல்ல முடியாத நிலையில் வீதியில் அமர்ந்திருந்து ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவரகள் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், யாழின் அமைதியைக்கெடுக்காதே, தேசிய பாதுகாப்பு மாணவர்களுக்கு இல்லையா?, அரசே! அடக்கு முறை வேண்டாம் என்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்றும் 300ற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
October 26, 2016
Rating:

No comments:
Post a Comment