அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவுகள் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அடுத்த சில மணித்துளிகளில் வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த தேர்த்லில் முக்கிய வேட்பாளர்களாக களம் கண்டுள்ள ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் பொதுமக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள்படி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தமது மனைவியுடன் வாக்களித்த பின்னர் தெரிவித்துள்ள கருத்துகள் இதையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
”தேர்தலின் முடிவை ஏற்றுக் கொள்வேன். எனக்கு எத்தகைய சூழ்நிலை அமையும் என்பதை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். அதிகாரம் தொடர்பான மாற்றங்கள் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வரலாற்றில் நான் இடம்பிடித்ததிற்கு மகிழ்ச்சியடைகிறேன்.” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது பெரும்பாலான மாகாணங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...
Reviewed by Author
on
November 09, 2016
Rating:
Reviewed by Author
on
November 09, 2016
Rating:



No comments:
Post a Comment