அண்மைய செய்திகள்

recent
-

இன்று எங்களுக்கு திருவிழா…..ஒரு ஆன்மாவின் குரல்...... RIP

இன்று உலகம் முழுவதும் ஆத்துமாக்களின் தினம் அனுஸ்ரிக்கப்படுகின்றது அவர்களின் நினைவாக இந்த ....
மன்னாரிலும்......

இந்த அழகான உலகத்தில் உயிர்கள் உருவாகுவதற்கு ஒரு அறையும் உலவுவதற்கு பின் நீள்துயில் கொள்வதற்கு ஒரு அறையும் தேவைப்படுகின்றது. வாழ்க்ககையைப்பற்றி பல புத்திஜீவிகள் மகான்கள் அறிவாளிகள் அறிவியலாளர்கள் சமயங்கள் பேசுகின்றன போதிக்கின்றன் கற்பிக்கின்றன நம்வாழ்வையும் ஞாபகம் ஊட்டுகின்றனர் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் வாழவேண்டும் என்ற தத்துவத்தை எம்மோடு இருக்கின்ற கூடிக்குழாவிய அம்மா அம்மம்மா  அப்பம்மா பெரியம்மா சின்னம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா மாமி மச்சாள் அண்ணி உடன்பிறப்புக்கள் உயிர்நண்பர்கள் நண்பிகள் கணவன் மனைவி பிள்ளைகள் அயலவர் என நீண்டு செல்லும் உறவுமுறைகள் ஏராளம்.

 இனம் மொழி மதம் சாதி எதுவாக இருந்தாலும் இரண்டு விடையங்கள் மட்டும் மாறாது நாம் யாராக இருந்தாலும் எமது உடலில் ஓடும் இரத்தம் சிவப்பானதுதான் அதுபோல எல்லோருக்கும் இறப்பு என்பது பொதுவானதான்


என்னிடம் நண்பன் வாழ்க்கை என்றால் என்ன இரண்டு வரிகளில் சொல்லு பார்ப்போம் என்றான்…!!!
சிந்தித்தேன் சிறிது நேரம்
சிரித்தான் என்னைப்பார்த்து
வாழ்க்கை…………….
கருவறைக்கு வெளியே..........
கல்லறைக்கு உள்ளே என்றேன்.....


என்னை யாரோ அறைந்தது போல இருந்தது திரும்பிப்பார்க்கிறேன் நண்பனைக்காணவில்லை சிரிக்கும் சத்தம் மட்டும் கேட்டது. எனது அருகில் இருவர் சரியாகச்சொன்னீர்கள் தம்பி.....
 வாழ்க்கை முடியும் போது தொடங்குகின்றது தொடங்கும் போது முடிகின்றது. இருக்கும் போது யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை ஏன் என்று கேட்பதில்லை எட்டிக்கூடப்பார்பபதில்லை இறந்த பின்பு எவ்வளவு செலவு மேளதாளம் பட்டாசு படையல் பந்தி எட்டுச்செலவு 31ஒன்று 41 ஒன்று இறந்தவன் உண்ணாதவற்றை எல்லாம் இறந்தவனின் விருப்பம் என்று படைத்து விட்டு அதையே அத்தனைபேரும் சேர்ந்து உண்பது.......

 படுக்க பாய் இல்லாமல் இருந்திருப்பான்.........
 பசிக்கு ஒரு நேர உணவில்லாமல் இருந்திருப்பான் ........
ஒழுங்கான மருந்தில்லாமல் இருந்திருப்பான்............
அநாதை மடத்தில்.............
கூட்டில் நாய் போல வீட்டில்.......
முதுமையின் தெருவோரத்தில்........
 பெற்ற பத்துப்பிள்ளையும் பெரிய வெளிநாட்டில் அன்பாய்பேசக்கூட ஆளில்லாமல் அநாதையாய் யாரோ கொள்ளி வைப்பான்........

இறந்தவிட்டால் உடனே வருவதில்லை முதலில் பணம் வரும் பல இலட்சம் செலவில் பெட்டி பட்டாசு முழக்கத்தில் மேளதாளத்துடன் வீதியில் செல்லும் போது ஏதோ தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் வாதியை அழைத்து செல்வது போல அவ்வளவு ஆனந்தம் யாரும் இப்போ அழுவதில்லை கத்தி..... கண்ணீர் வருவதும் இல்லை....... ஒப்பாரி பறை இல்லை பட்டாசும் பேஸ்புக்கும் செத்தவீட்டிலும் செல்ப்பி எடுக்கிறார்கள்.
கவலையை தெரிவிக்க ஒருவன் போடுகிறன் அதற்கு சிலர் லைக்-LIKE  பன்றான் விரும்புகிறேன் அர்த்தம் RIP அமைதியில் இளைப்பாருவாயாக.....போடலாம் ......REST IN PEACE
 இப்போது செலவு செய்யும் பணத்தினை முதலில் செலவு செய்திருந்தால் அவனோ அவளோ இறநடதிருக்க மாட்டார்கள்
கண்ணெதிரே இருக்கும் போது கண்டுகொள்வதில்லை அங்கே பார் தம்பி கல்லறையை அந்தக்கல்லறையின் பெறுமதி 2 இலட்சமாம் அந்தக்கல்லறையில் இருப்பது அவனை பத்து மாசம் சுமந்து பெற்ற தாயை அவன் 50ஆயிரம் செலவு செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் கருவறை தந்தவளுக்கு கல்லறை கட்டினான் மகன் இப்படி பல மகன்களும் மகள்களும் இருக்கின்றார்கள் கல்லறையும் அவன் விரும்பிக்கட்டவில்லை அருகில் இருக்கும் கல்லறை 1இலட்சம் அதை விட பெறுமதியாக இருக்கவேண்டும் தன்னை உயர்த்தி காட்டவேண்டும் என்பதற்காகத்தான் ஒளிய தாய் தந்தை மீதோ உள்ள பாசத்தினால் இல்ல.... இன்னும் எத்தனை உள்ளங்கள் பாசத்திற்காய் ஏங்கித்தவிக்கின்றன..... பணத்திற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிவிட்டு மனதில் போராட்டத்துடன் மரணநாட்களை எண்ணியவாறு….

எது எப்படி இருப்பினும் இன்று எங்களுக்கு திருவிழாதான் வருடாவருடம் கார்த்திகை மாதம் 02ம் நாள் வருகிறது என்றால் சிலநாட்களுக்கு முன்பே எங்கள் இடங்கள் துப்பரவு செய்து எங்கள் பெயர்களை வடிவாக எழுதி வர்ணம்பூசி மாலைகள் மலர்கள் சந்தனக்குச்சிகள் மெழுகுதிரிகள்

இருள் மண்டி வாசனை இன்றி கிடக்கும் எம்மிடம் இன்று எமது உறவுகளின் வருகையால் அழுகையின் சத்தத்திலும் எரியும் சந்தனக்குச்சிகளிலும் இருந்து வரும் வாசனையிலும் மெழுவர்த்தி ஒளியிலும் பிரகாசிக்கின்றது. நான் வீட்டில் இருக்கும் போது உணவோ..... உடையோ..... வாங்கித்தராத எட்டிப்பார்க்காத ......பிள்ளைகள் உறவுகள் எங்களை பார்க்க வந்து சுற்றி நிற்கவும் கண்ணீரில் கண்ணீர் சொரிகின்றது. எனக்கு சந்தேகம் ஒரு வேளை இதுவும் பிறரின் பார்வைக்காகவோ……

இல்லை கடமைக்காகவோ தெரியவில்லை….. இன்னும் பல கல்லறைகள் குப்பைகளாகவே இருக்கின்றது அவர்களை எட்டிப்பார்க்க யாரும் வருவதில்லை வந்து பாரக்கவோ நேரமில்லை.... ஆனால் அவர்களும் இங்கு வரநேரமிருக்கு அந்த நேரம்….. போலியான வாழ்வில் திழைக்கும் போது போகும் இடம் தெரியாது  பிறப்பும் இறப்பும் தெரியாத ஜடம் பிரதானமாய் எல்லோருக்கும் அமையும் இடம்……..

எனது தொலைபேசி அலறுகிறது எடுத்து காதில் வைக்கிறேன். டேய்........ என்னடா கொழுத்தும் வெயில என்னத்த வெட்டிப்பிடுங்கிற.......... இன்னும் சவக்காலையிலா...... இருக்கிறா…. அப்ப எங்க நிக்கிற நான் வீட்ட வந்து அரைமணிநேரமாகுது அடப்பாவிபயலே...... நான் நான் இவ்வளவு நேரமா…தூரத்தில் பலர் தமது உறவுகளின் கல்லறையை…..
தொலைபேசி அழைப்பு வராவிடில் ஆன்மாக்களின் ஆர்ப்பாட்டம்….

 நாம் பிறக்கும் போதே பிறந்து விடுகிறது இறப்பு நாம் தான் உணராமல் இந்த சிற்றின்ப உலகில் சிக்கித்தவிக்கின்றோம்.......
நிறைவேறாத ஆசைகள் கனவுகள் எண்ணங்களோடு நீள்துயில் கொள்ளும் எம் உன்னத

ஒவ்வொரு ஆத்துமாக்களும் சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்....
-வை.கஜேந்திரன்- 

 












இன்று எங்களுக்கு திருவிழா…..ஒரு ஆன்மாவின் குரல்...... RIP Reviewed by Author on November 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.