அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிய விசேட குழு சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்.Photos
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான விசேட குழுவினர் நேற்று திங்கள் (7) அனுராதபுரம் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்திருந்தனர்.
-இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,டெலோ இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.வேலாயுதம் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன் போது அங்கு சென்ற குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலவரம் தொடர்பில் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
மேலும் கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பொழுது போக்கை கருத்தில் கொண்டும் கைதிகள் பார்ப்பதற்காக தொலைக்காட்சிப்பெட்டி ஒன்றை குறித்த குழுவினர் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிய விசேட குழு சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்.Photos
Reviewed by NEWMANNAR
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment