வடக்கில் விகாரைகளை புனரமைத்து பிக்குகளை குடியேற்ற வேண்டும் : இராவணா பலய,,,
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் எதிர்ப்பு கூட்டங்களை நடத்த உள்ளதாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் சிறிய சம்பவம் நடந்தாலும் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது.
தெற்கில் சிறிய சம்பவங்கள் நடந்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர்.
வடக்கில் 270 விகாரைகள் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விக்னேஸ்வரன் அறியாமல் இருக்கலாம். இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தி அவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கில் விகாரைகள் தொடர்பாக தேடி அறிந்து, அவற்றை புனரமைத்து பௌத்த பிக்குகளை அங்கு மீண்டும் குடியேற்ற வேண்டும்.அப்படி செய்யாவிட்டால், தொல் பொருள் திணைக்களத்தை முற்றுகையிடுவோம்.
அத்துடன் இந்த வழிபாட்டு தலங்கள் தொடர்பாக தொல் பொருள் திணைக்கள பணிப்பாளரால் அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்க போவதில்லை என சவால் விடுத்தார்.
அப்படியிருந்தும் வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
மேலும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை பிரிக்கும் தேவையே அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடுகளை மதித்து நாட்டை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் விகாரைகளை புனரமைத்து பிக்குகளை குடியேற்ற வேண்டும் : இராவணா பலய,,,
Reviewed by Author
on
November 28, 2016
Rating:
Reviewed by Author
on
November 28, 2016
Rating:


No comments:
Post a Comment