மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற, மாவீரர் நாள் நிகழ்வு -Video -படங்கள் இணைப்பு,,,
மன்னார் நகரசபைக்குட்பட்ட மடு பிரதேச சபையின் பண்டிவிரிச்சான் கிராமத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில்27.11.2016 இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது இந்நிகழ்வில் மடு பிரதேசத்தை சேர்ந்த 300 மேற்பட்ட மக்கள் இராணுவத்தினரின் அச்சறுத்தலையும் கருத்தில் கொள்ளாமல் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
மாலை 6.00 யளவில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் பொதுமக்கள் குழந்தைகள் குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
மாவீரர்களுக்கான இவ் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டு மாவீரர் தியாக சுடரை ஏற்றினார்.
பின்பு உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன் மாவீரர்களின் தியாகம் இலங்கை அரசால் மறுக்கப்பட்டாளும் உலகில் வாழும் தமிழ் மக்களால் மறக்க படுவதில்லை எனவும் மாவீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் ஆகாது எனவும் அவர்களுடைய தியாகத்துக்கான விடை தமிழ் மக்களுக்கு வெகுசீக்கிரமாக கிடைக்கும் எனவும் அதுவரை தமிழ் மக்களின் தாகம் அடங்கபோவதும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.பலரின் கண்ணீரின் மத்தியில் இவ்நிகழ்வு இடம்பெற்றது.


மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற, மாவீரர் நாள் நிகழ்வு -Video -படங்கள் இணைப்பு,,,
Reviewed by Author
on
November 27, 2016
Rating:
Reviewed by Author
on
November 27, 2016
Rating:





No comments:
Post a Comment