1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம்!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வோறு மாற்றங்கள் இடம்பெறுகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டிக் பிராந்தியத்தில் சராசரியை விட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியை விட சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் இருக்கும். ஆனால், இம்முறை இந்த நிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேவேளை, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வட துருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம்!
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment