ரஷ்ய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை: நாட்டை விட்டு வெளியேற 72 மணி நேர கெடு
ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 8–ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்ய அதிகாரிகள் செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்த தேர்தல் முறையில் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.
தற்போது அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இதே குற்றச்சாட்டை கூறி குறித்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளார்.
மட்டுமின்றி டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
RT America ✔ @RT_America
President Obama's statement on actions being taken in response to alleged Russian hacking
மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேர் அவர்களின் குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒபாமாவின் இந்த அதிரடி உத்தரவால் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ரஷ்ய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை: நாட்டை விட்டு வெளியேற 72 மணி நேர கெடு
Reviewed by Author
on
December 30, 2016
Rating:

No comments:
Post a Comment