அண்மைய செய்திகள்

recent
-

நேற்று மட்டும் வருமானம் ஒன்பது கோடி! இலங்கையில் சாதனை


தனியார் பஸ் உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நேற்று நிறைவடைந்த நிலையிலும் இ.போ.சபைக்கு சுமார் ஒன்பது கோடி ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

நேற்று மட்டும் இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைத்த வருவாய் சாதனைக்குரிய முறையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு கைவிட்டாலும் சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ்களே சேவையில் ஈடுபட்டிருந்தன.

இதன் காரணமாகவே இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த வருமானம் கிட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக சனிக்கிழமைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ஆறு கோடியே எண்பது இலட்சம் ரூபா வருவாயாக கிடைக்கும், ஆனால் நேற்று 3 கோடி ரூபா மேலதிகமாக 9 கோடி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டும் வருமானம் ஒன்பது கோடி! இலங்கையில் சாதனை Reviewed by Author on December 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.