அண்மைய செய்திகள்

recent
-

கொடூர கொலை - கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரை துண்டுத்துண்டாக வெட்டியும், எரியூட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம்(வயது – 62) என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

துண்டுத்துண்டாக வெட்டிக் கொலை செய்யது எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொலை சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் உடனே பெற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கிளிநொச்சி நீதிமன்றின் நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடூர கொலை - கிளிநொச்சியில் சம்பவம் Reviewed by Author on December 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.