அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா மன்னாரில் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைப்பு.- Photos

வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா தனது மாகாணசபை பாதீட்டு நிதி ஒதுக்கிட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு உதவித்திட்டங்களை நேற்று வெள்ளிக்கிழமை(09) வழங்கி வைத்துள்ளார்.

இதற்கு அமைவாக மீனவ கிராமங்களில் ஒன்றான பேசாலை கிராமத்தில் மீன் பிடியில் ஈடுபடும் ஒரு தொகுதி மீனவர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் 'விடுவலை'த்தொகுதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் குறித்த கிராமத்தில் மீன் வெட்டும் தொழிலாளர்களுக்கு கத்தியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை காத்தான் குளம் புனித சூசையப்பர் ஆலயத்தின் வழர்ச்சிக்காக ஒரு இலட்சம் ரூபாய் நிதியை பங்குத்தந்தையிடம் காசோலையாக கையலித்தார்.

இதே வேளை சிறுக்கண்டன் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் மற்றும் நிழல்பிரதி இயந்திரம்(போட்டோ கொப்பி) போன்றவறையும் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.












வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா மன்னாரில் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைப்பு.- Photos Reviewed by NEWMANNAR on December 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.