அண்மைய செய்திகள்

recent
-

பனைவள அபிவிருத்தி ஆண்டாக 2017 பிரகடனம்

வடக்கு மாகாண பனைவள அபிவிருத்தி ஆண்டாக இந்த வருடத்தை வடக்கு மாகாண சபை பிர கடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 82 ஆவது அமர்வு நேற்றைய தினம் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் மேற்படி விடயம் பிரேரணையாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வடக்கின் தனித்துவமான இயற்கை தாவரமாகவும், வடக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவல்ல வளமாகவும் பனைமரங்கள் உள்ளன. எனினும் வடக்கின் அடையாளமாகவும், வடக்கின் சுற்றுசூழலில் காத்திரமான வகிபாகத்தை கொண்டதாகவும் விளங்குகின்ற பனைமரங்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக பெருமளவு அழிக்கப்படுகின்றன.

நுனிக்குருத்து தொடக்கம் அடிவேர் வரை தனது சகல பாகங்களையும் பயனாக தர வல்ல கற்பகதருக்களான இப்பனை மரங்களில் இருந்து இதுவரையில் பொருளாதார ரீதியிலான உச்சப் பயன்பாடு பெறப்படவில்லை. இவற்றை கருத்தில் கொண்டு பனைமரங் களை அழிவிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் பனைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் செயற்பாடுகளையும்,

வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் நடப்பு 2017ஆம் ஆண்டினை வடக்கு மாகாண பனைவள அபிவிருத்தி ஆண்டு என பிரகடனம் செய்வது என இந்த சபை கோருகின்றது. என்ற தீர்மானத்தை விவ சாய அமைச்சர் ஐங்கரநேசன் முன்மொழிந்தார். இதையடுத்து இந்த பிரேரணை எதிர்ப்பின்றி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
       
பனைவள அபிவிருத்தி ஆண்டாக 2017 பிரகடனம் Reviewed by Author on January 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.