அண்மைய செய்திகள்

recent
-

கடந்த 30 வருடங்களாக நடக்காத அதிசயம் தற்போது சுவிஸில்! என்ன தெரியுமா?


சுவிற்சர்லாந்து நாட்டில் எங்கு பார்த்தாலும் பனிப்பொழிவு அதிகளவில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த 2017ஆம் வருட ஜனவரி மாதம் ஒரு அதிசய மாதமாகவே சுவிஸ் வாழ் மக்களுக்கு அமைந்துள்ளது.

காரணம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸின் பல பகுதிகளில் வானிலையானது -3 டிகிரி என்ற அளவில் உள்ளது.

கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பல பகுதிகளில் -4.3 டிகிரி என்ற அளவில் வானிலை இருந்தது. தற்போது அதை நிகழ்கால வானிலை முறியடித்துள்ளது.

ஆனாலும், இதுபற்றி பயப்பட தேவையில்லை என கூறியுள்ள சுவிற்சர்லாந்தின் வானிலை ஆய்வு மையம் இன்னும் சில தினங்களில் குளிரின் தாக்கம் மெல்ல குறைய ஆரம்பித்து விடும் என தெரிவித்துள்ளது.

இந்த குளிர் வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருப்பதுடன், சுவிஸில் உள்ள பல முக்கிய ஏரிகள் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 வருடங்களாக நடக்காத அதிசயம் தற்போது சுவிஸில்! என்ன தெரியுமா? Reviewed by Author on January 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.