அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் 'சனச' அபிவிருத்தி வங்கியின் 89 ஆவது கிளை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படங்கள் )

'சனச' அபிவிருந்தி வங்கியின் 89 ஆவது கிளை இன்று வியாழக்கிழமை(19) காலை 11 மணியளவில் மன்னார் பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

-சனச அபிவிருத்தி வங்கியின் 89 ஆவது கிளையாக மன்னார் நகரில் திறக்கப்பட்டுள்ள போதும் மன்னார் நானாட்டான் பகுதியில் ஏற்கனவே ஒரு கிளை திறக்கப்பட்டுள்ளமையினால் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது கிளையாக குறித்த வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'சனச' அபிவிருந்தி வங்கியின் மன்னார் முகாமையாளர் ஏ.நாகேந்திரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.

-இதன் போது 'சனச' அபிவிருந்தி வங்கியின் தலைவி சாமதானி கிறிவந்தனியா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த வங்கியை திறந்து வைத்தார்.

இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ,சர்வ மதத்தலைவர்கள், 'சனச' அபிவிருந்தி வங்கியின் கிளை முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வங்கியை வைபவ ரீதியாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-
(19-1-2017)











மன்னார் நகரில் 'சனச' அபிவிருத்தி வங்கியின் 89 ஆவது கிளை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.