அண்மைய செய்திகள்

recent
-

உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் விபரங்களை திரட்டிய பொலிசார்!


வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்ட களத்திற்கு வந்த பொலிஸார் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தகவல்களை சேகரித்தனர். இரண்டாவது நாளாக நேற்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்ட நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள் அப்பகுதியில் வருகை தந்து ஆதரவு தெரிவிக்க முற்பட்டு வருவதுடன் அரசியலாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இந் நிலையில்நேற்று மாலை போராட்ட களத்திற்கு வருகை தந்த பொலிஸார் படிவமொன்றில் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை திரட்டினர். இவ் உத்தரவு எங்கிருந்த பொலிஸாருக்கு கிடைத்து என்பது தெரியாத நிலையிலும் தகவலை பொலிஸார் தகவலை சேகரிப்பதால் காணாமல் போனோரின் உறவினர்கள் தகவலை வழங்கியிருந்தனர்.

உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் விபரங்களை திரட்டிய பொலிசார்! Reviewed by NEWMANNAR on January 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.